- வாழ்வில் வாஞ்சையுற்று – உன்னை
வழி தொடர்ந்தவனை
விழி பிதுங்கிட விரட்டியதென்ன … ?
சொர்க்கத்திற்கு …!
- துரோகத்திற்கு இலக்கணமாய் – நீ
இருந்தல்ல வலி எனக்கு …
- தியாகம் என நினைத்து
உன்னை துறந்து …
விடுதலை வேண்டி
தன்னை துறந்த – என்
தனயனின் நினைப்பே – நெஞ்சைப் பிளக்கும்
உளி எனக்கு !
- அவன் செய்த
அத்தனையும் – வீணா?
விடை சொல் எனக்கு !
- பெண்ணே – நீ
விண்ணைத் தாண்டி வர வில்லை …
பரவாயில்லை – இனி
படி தாண்டாமலாவது இரு – அதுவெ
போதும் எனக்கு …
- உன்னை நம்பிய – இன்னொரு
உயிராவது மிச்சப்படுமே ….
- இராஜசேகரன்

No comments:
Post a Comment