Tuesday, 14 August 2012

என் தனயன்









 
  • வாழ்வில் வாஞ்சையுற்று – உன்னை
    வழி தொடர்ந்தவனை
    விழி பிதுங்கிட விரட்டியதென்ன … ?
    சொர்க்கத்திற்கு …!
 
  • துரோகத்திற்கு இலக்கணமாய் – நீ
    இருந்தல்ல வலி எனக்கு …
       

  • தியாகம் என நினைத்து
    உன்னை துறந்து …
    விடுதலை வேண்டி
    தன்னை துறந்த – என்
    தனயனின் நினைப்பே – நெஞ்சைப் பிளக்கும்
    உளி எனக்கு !
 
  • அவன் செய்த
    அத்தனையும் – வீணா?
    விடை சொல் எனக்கு !
     

  • பெண்ணே – நீ
    விண்ணைத் தாண்டி வர வில்லை …
    பரவாயில்லை – இனி
    படி தாண்டாமலாவது இரு – அதுவெ
    போதும் எனக்கு …
 
  • உன்னை நம்பிய – இன்னொரு
    உயிராவது மிச்சப்படுமே ….
 
- இராஜசேகரன்

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...