Thursday, 26 July 2012

பசுமை


காதோடு காது வைத்து ,
கிசு கிசுத்த நாட்கள்…
கானா தூரத்தில் இருந்தாலும்,
கண்ணோடு கண் பேசிய நாட்கள்…
----
தனிமையில் இருந்த போதும்,
என் உயிர் தீண்டும் உன் ஸ்பரிசம்…
----
வறுமையில் வாடிய போதும்,
பசுமையாய் இருந்தது வாழ்க்கை…
----
பணத்தில் பசுமையாகிய பின் – ஏனொ
எனக்குத் தோன்றுகிறது – வெறுமையும்
உள்ளூர ஒரு வறுமையும்… !


----

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...