Tuesday, 14 August 2012

உலகில் உள்ள அத்தனைப் பெண்களும் ...













 
உலகில் உள்ள அத்தனைப் பெண்களும்
உன்னைப் போலவே தெரிகிறார்கள் எனக்கு... 

அம்மா திட்டும் போதும் சிரிக்கிறேன் நான்...
அரை மணி நேர அர்ச்சனைக்குப் பின்னும் கேட்டேன்,
"அவ்வளவு தானா அம்மா ? " 

இத்தனை நாளாய் , முறைக்கக் கூட
யோசித்த நடத்துனரும் - கேட்கிறார்
"வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா...? மேல ஏறுடா..."  

இயந்திரத்தனமாய் இருந்தவனிடமும்
இதயம் இருக்கிறது என்பதை
கண்டு பிடித்துச் சொன்னவளே... 

உலகில்
உள்ள அத்தனைப் பெண்களும்
உன்னைப் போலவே தெரிகிறார்கள் எனக்கு...
 

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...