யாரடா நீ எனக்கு ???
நீ என் என்னவன் இல்லை,
ஆனால் என்னவாக இருக்கிறாய்
நீ எனக்கு ???
என் பள்ளியிலும் கல்லூரியிலும்
வேலை செய்யும் காலங்களிலும் - உன்னை
சந்திக்கவில்லையே என்று மனது அங்கலாய்க்கிறது,
யாரடா நீ எனக்கு ?
உன்னுடைய தோழமை
என்னுடைய சிறு வயதிலிருந்தே
கிடைக்கவில்லையே என
மனம் பெருமூச்சு விடுகிறது,
யாரடா நீ எனக்கு ?
உன்னிடம் பேசும் போது
நான் நானாக இருப்பதை உணர்கிறேன்,
யாரடா நீ எனக்கு ?
என் உணர்வுகள் வார்த்தைகளாக
எவ்வித திருத்ததமும் இன்றி உன்னை வந்தடைகிறது,
யாரடா நீ எனக்கு ?
உன்னை கண்டதும்
சிறு பிள்ளை நீண்ட நேரம் கழித்து
பெற்றோரை பார்த்தது போல் மனம்
ஆனந்த வெள்ளத்தில் துள்ளுகிறது,
யாரடா நீ எனக்கு ?
அது எப்படி?
தொலைதூர தொலைபேசியின் வாயிலாகவே
என்னை சொல்லொண்ணாத மகிழ்ச்சிக்கு ஆளாக்கினாய்,
யாரடா நீ எனக்கு ?
உன்னிடம் பேசலாம் பேசலாம்
என்ன வேண்டுமென்றாலும்
பேசிக்கொண்டே இருக்கலாம்,
யாரடா நீ எனக்கு ?
என்னுடைய துன்ப காலத்தில்
என் அருகில் இல்லையானாலும்
எப்படியடா தொலைதூர தூணாய் நின்றாய்,
யாரடா நீ எனக்கு ?
நாம் பேசும் போது
என் மனமும் முகமும் வாடி இருக்கையில்
நீ கண்டுகொள்ள தவறியதில்லை, யாரடா நீ எனக்கு ?
எங்கேயடா போனாய் இத்தனை காலம் !!!
உன் தோழமையை எனக்கு தர
ஏன் இவ்வளவு தாமதம்,
யாரடா நீ எனக்கு ?
அடுத்த பிறவி நமக்கு இருக்கும் பட்சத்தில்
அப்போதாவது என் வாழ்க்கையில்
சிறு வயது முதலே உன் தோழமை வேண்டும் என்று
என்னை நினைக்க வைக்கிறாய் !!! (எப்புட்றா மொம்ன்ட்)
யாரடா நீ எனக்கு ?
இன்னும் சொல்ல போனால்
இம்மாதிரி எல்லாம் எழுத தெரியாத
என்னையே எழுத வைத்த கவிஞன் நீ,
யாரடா நீ எனக்கு ?
உன்னிடம் பேசும் போதெல்லாம்
உன்னை நான் வியப்பாக நினைக்க
தவறியதே இல்லை,
யாரடா நீ எனக்கு ?
உன் முகத்திலும் மனதிலும்
மகிழ்ச்சி சற்று குறைந்தாலும்,
அதற்கேற்றற்போல் என் மனம்
இங்கு கனக்கிறதடா,
யாரடா நீ எனக்கு ?
என் வாழ்வில்
உன் தோழமை கிடைக்க
என்ன பாக்கியம் செய்தேனோ
என்று நினைக்க வைக்கிறாயடா !!!
யாரடா நீ எனக்கு ?
எப்போதும் நீ எனக்கு பிரம்மிப்பாய்,
புதிதாகவே தோன்றுகிறாய்,
யாராட நீ எனக்கு !!!
என் அப்பன் ஈசனுக்கு
நன்றி கூறிக்கொண்டே இருக்கிறேன்
உன் தோழமையை எனக்கு அளித்ததற்கு,
யாரடா நீ எனக்கு ?
நீ என் என்னவன் இல்லை,
ஆனால் என்னவாக இருக்கிறாய்
நீ எனக்கு ???
ஒரு வேளை
எனக்கான என்னவனாக
இருப்பதை தவிர்த்து,
மற்ற எல்லாமாகவும்
நீ எனக்கு இருக்கிறாயோ !!!!
நீ என் மனம் உற்ற உயிர் தோழனோ?
யாரடா நீ எனக்கு ?
இவ்வளவு சிந்தித்தும்
எனக்கு விளங்கவில்லை,
நீயே சொல் யாரடா நீ எனக்கு ???
எப்படியோ இருடா - ஆனால்
எப்போதும் இப்படியெல்லாம் இருடா !!!
- காயத்ரி செல்வராஜ்
காட்டுப்பாக்கம். சென்னை