Saturday, 21 December 2024

சிறுக்கி



 முந்தானை பார்க்கிறாள்

இந்த ஆணை சாய்க்கிறாள் 


முறுவல் பூக்கிறாள்

மனம் பூரணமாக நிறைகிறாள் 


நெற்றியில் சரிந்து விழும் 

கற்றை குழலில்

என் ஒற்றை இதயம்

கொள்ளை அடிக்கிறாள் 


தன் சிற்பம்

என் நெஞ்சில் தானே வடிக்கிறாள்...


ஏக்கம் பெருக்கி

என்னை வதைக்கும் சிறுக்கி...



- ஆக்கம்

- சுந்தர இராஜசேகரன்

Sunday, 15 December 2024

தோழமை

 யாரடா நீ எனக்கு ???


நீ என் என்னவன் இல்லை, 

ஆனால் என்னவாக இருக்கிறாய் 

நீ எனக்கு ???


என் பள்ளியிலும் கல்லூரியிலும் 

வேலை செய்யும் காலங்களிலும் - உன்னை 

சந்திக்கவில்லையே என்று மனது அங்கலாய்க்கிறது, 

 யாரடா நீ எனக்கு ?


உன்னுடைய தோழமை 

என்னுடைய சிறு வயதிலிருந்தே 

 கிடைக்கவில்லையே என 

மனம் பெருமூச்சு விடுகிறது, 

யாரடா நீ எனக்கு ? 


உன்னிடம் பேசும் போது 

நான் நானாக இருப்பதை உணர்கிறேன், 

யாரடா நீ எனக்கு ?


என் உணர்வுகள் வார்த்தைகளாக 

எவ்வித திருத்ததமும் இன்றி உன்னை வந்தடைகிறது, 

 யாரடா நீ எனக்கு ?


உன்னை கண்டதும் 

சிறு பிள்ளை நீண்ட நேரம் கழித்து 

பெற்றோரை பார்த்தது போல் மனம் 

ஆனந்த வெள்ளத்தில் துள்ளுகிறது, 

யாரடா நீ எனக்கு ?


அது எப்படி? 

தொலைதூர தொலைபேசியின் வாயிலாகவே 

என்னை சொல்லொண்ணாத மகிழ்ச்சிக்கு ஆளாக்கினாய், 

யாரடா நீ எனக்கு ? 


உன்னிடம் பேசலாம் பேசலாம் 

என்ன வேண்டுமென்றாலும் 

பேசிக்கொண்டே இருக்கலாம், 

யாரடா நீ எனக்கு ?


என்னுடைய துன்ப காலத்தில் 

என் அருகில் இல்லையானாலும் 

எப்படியடா தொலைதூர தூணாய் நின்றாய், 

யாரடா நீ எனக்கு ?


நாம் பேசும் போது 

என் மனமும் முகமும் வாடி இருக்கையில் 

நீ கண்டுகொள்ள தவறியதில்லை, யாரடா நீ எனக்கு ?


எங்கேயடா போனாய் இத்தனை காலம் !!!

 உன் தோழமையை எனக்கு தர 

ஏன் இவ்வளவு தாமதம், 

யாரடா நீ எனக்கு ?


அடுத்த பிறவி நமக்கு இருக்கும் பட்சத்தில் 

அப்போதாவது என் வாழ்க்கையில் 

சிறு வயது முதலே உன் தோழமை வேண்டும் என்று 

என்னை நினைக்க வைக்கிறாய் !!! (எப்புட்றா மொம்ன்ட்) 

யாரடா நீ எனக்கு ? 


இன்னும் சொல்ல போனால் 

இம்மாதிரி எல்லாம் எழுத தெரியாத 

என்னையே எழுத வைத்த கவிஞன் நீ, 

யாரடா நீ எனக்கு ?


உன்னிடம் பேசும் போதெல்லாம் 

உன்னை நான் வியப்பாக நினைக்க 

தவறியதே இல்லை, 

யாரடா நீ எனக்கு ?


உன் முகத்திலும் மனதிலும் 

மகிழ்ச்சி சற்று குறைந்தாலும், 

அதற்கேற்றற்போல் என் மனம் 

இங்கு கனக்கிறதடா, 

யாரடா நீ எனக்கு ? 


என் வாழ்வில் 

உன் தோழமை கிடைக்க 

என்ன பாக்கியம் செய்தேனோ 

என்று நினைக்க வைக்கிறாயடா !!! 

யாரடா நீ எனக்கு ?


எப்போதும் நீ எனக்கு பிரம்மிப்பாய், 

புதிதாகவே தோன்றுகிறாய், 

யாராட நீ எனக்கு !!! 


என் அப்பன் ஈசனுக்கு 

நன்றி கூறிக்கொண்டே இருக்கிறேன் 

உன் தோழமையை எனக்கு அளித்ததற்கு, 

யாரடா நீ எனக்கு ? 


நீ என் என்னவன் இல்லை, 

ஆனால் என்னவாக இருக்கிறாய் 

நீ எனக்கு ???


ஒரு வேளை 

எனக்கான என்னவனாக 

இருப்பதை தவிர்த்து, 

மற்ற எல்லாமாகவும் 

நீ எனக்கு இருக்கிறாயோ !!!!

நீ என் மனம் உற்ற உயிர் தோழனோ? 

யாரடா நீ எனக்கு ? 


இவ்வளவு சிந்தித்தும் 

எனக்கு விளங்கவில்லை, 

நீயே சொல் யாரடா நீ எனக்கு ???


எப்படியோ இருடா - ஆனால் 

எப்போதும் இப்படியெல்லாம் இருடா !!!


- காயத்ரி செல்வராஜ்

காட்டுப்பாக்கம். சென்னை

Thursday, 24 October 2024

உள்ளம்

உள்ளம்- 

காதலும் காதல் சார்ந்த இடமாம்

ஆம் -  இது ஆறாம் திணை

காதலில் திளைத்து

காதலால் தழைத்து

காதலுக்காக உழைத்து

அதில் சில நேரம் பிழைத்து!

என்றும் முடிவிலி காத(ல்)லி!

Sunday, 11 February 2024

சங்கதமிழே வணக்கம்!

சங்கத்தமிழே வணக்கம்!

என்னென்று சொல்வேன் 
உள்ளத்தின் உணர்வுகளை!

தமிழென்றால் 
மொழியென்று மொழிகின்றார்

அல்லவென்று மறுப்பேனில்லை

தமிழ் நமக்கு மொழி மட்டுமில்லை
வாழ்வியல் சொல்லும் 
உயிர்க்கும் இணையாக நிற்கும்

மொழிஎன்ற எல்லை தாண்டி
உணர்வாய் நிற்பது காணீர்!

சுவர்க்கத்தில் ஊறும் அமுதம் என்று
கதைசொல்லி வைத்தார் அறிவீர்

சுவர்கம் என்பது தமிழில் 
சக வர்கம் என்று பிரியும்
சக வர்க்கம் என்பதை தான் 
சங்கம் என்று கண்டோம்

சக வர்க்கம் கூடிய போதெல்லாம்
ஊறி நின்றது தமிழ்
அமிழ்தாகி நின்ற தமிழ்!

முதுமை சேராதிருக்க அமிழ்து வேண்டுமென்றார்
தமிழ் அருந்தி நின்றோரெல்லாம் 
குன்றா இளமையுடன் 
குதூகளித்தார் காணீர்!

உடலுக்கு ஆகும் வயது
தமிழ் உள்ளத்திற்கு ஆவதில்லை!

இதைச் சொல்லும் விதமாய்த்தான்
தமிழைநல் அமுதென்றார் பாவேந்தர்!

சங்கத்தில் வளர்ந்த தமிழ்
எங்கள் அங்கத்தில் ஒன்றாம்!

சங்கத்தமிழுககும் தமிழுக்குச் சங்கம் கண்டோருக்கும் வணக்கம்!

ஆக்கம்
சுந்தர ராஜசேகரன்.

ஆக்கம்
சுந்தர ராஜசேகரன்.

அக்டோபர் 2024 மிச்சிகன் தமிழ் சங்கம் கதம்பம் இதழில் பிரசுரிக்க பட்டது.





நண்பர் அணில் அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு SSST கமிட்டி குழுவில் பகைரப்பட்டது. 13 DEC 2024


Translation :

Poem  
13 Skagankaga  
Sangam Tamil 3454  
Greetings!  
Sundar Rajasekaran  
Greetings, Sangam Tamil!  
Greetings, Sangam Tamil!  
What shall I say  
About the feelings of the heart!  
When it comes to Tamil,  
They say it is a language;  
I do not deny it.  
Tamil is not just a language for us;  
It stands as a companion  
That speaks of life.  
Beyond the limits of what is called language,  
See how it stands as an emotion!  
In heaven, they say, there is nectar,  
And thus, the story is told.  
In Tamil, heaven  
Is divided as 'Sakha Varga.'  
What we found as 'Sakha Varga'  
Is what we call Sangam.  
Whenever the Sakha Varga gathers,  
Tamil has stood firm,  
Tamil has stood as nectar!  
Those who drink Tamil,  
Wishing for nectar that does not age,  
With youthful exuberance,  
Rejoice, see!  
The age that affects the body  
Does not affect the heart of Tamil!  
It is in this manner  
That Bhavendhar called Tamil  
The noble nectar!  
Tamil grown in the Sangam  
Is our own!  
Greetings to Sangam Tamil and Tamil, 
And to those who have seen the Sangam!  
33  

Kathambam October 2024

Monday, 8 January 2024

என் இளமையின் நினைவுகள்

சாக்கின் நிறத்தில் 
ஒரு கால்சட்டை
உற்றுப்பார்த்தால் தெரியும் 
பின் பக்க ஓட்டை
சற்றே மஞ்சள் தோய்ந்த ஊக்கு 
போட்ட மேல்சட்டை
மதிய உணவுக்கு கொண்டு 
செல்வேன் சிறு தட்டை

பயந்து பயந்து 
ஏழை என்ற எண்ணத்திலேயே 
சென்ற பள்ளி வாழ்க்கை!

ஆறுதலாக வந்த 
தேவதையாக எங்கள் 
தொடக்கப்பள்ளி ஆசிரியை!

முதல் முதல் என்னையும் நம்பி 
மேடை ஏற்றிய தமிழ் ஆசிரியை!

கல்லூரி வந்து 
ஆங்கிலவழி யில்
விழி பிதுங்கி 
நின்ற போது வந்த எங்கள் 
ஆங்கில ஆசிரியர்!

நினைக்கிறேன் 
இன்றும் நன்றியோடு!

இளமை காலம்!
என் இனிமைக்காளம்!

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...