Wednesday, 15 August 2012
Tuesday, 14 August 2012
உலகில் உள்ள அத்தனைப் பெண்களும் ...
உலகில் உள்ள அத்தனைப் பெண்களும்
உன்னைப் போலவே தெரிகிறார்கள் எனக்கு... அம்மா திட்டும் போதும் சிரிக்கிறேன் நான்... அரை மணி நேர அர்ச்சனைக்குப் பின்னும் கேட்டேன், "அவ்வளவு தானா அம்மா ? " இத்தனை நாளாய் , முறைக்கக் கூட யோசித்த நடத்துனரும் - கேட்கிறார் "வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா...? மேல ஏறுடா..." இயந்திரத்தனமாய் இருந்தவனிடமும் இதயம் இருக்கிறது என்பதை கண்டு பிடித்துச் சொன்னவளே... உலகில் உள்ள அத்தனைப் பெண்களும் உன்னைப் போலவே தெரிகிறார்கள் எனக்கு...
காலமெல்லாம்
- காலமெல்லாம் காதல் வாழ்க…!
காதல் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது !
இனிமேலாவது காதலர்கள் வாழட்டும்…
- கருவறைக்குள் பிறந்து – இன்றுவரை
காதலர்கள் கல்லறைக்குள் புகுவதேன் ?
இனிமேலாவது காதலர்கள் வாழட்டும்…
- தன்னிலை மறந்து தறிகெட்டோடுவொர் கூட,
தடுமாறாமல் வாழும் போது…
தான் கொண்ட காதலுக்காக
தன்னையே தரத்துணியும்
காதலர்களுக்கு மட்டும் கண்ணீரோ ?
இனிமேலாவது காதலர்கள் வாழட்டும்…
- காதலர்களை உரமாக்கி
காதலர்களின் கல்லறைகளில் – காதல்
காலமெல்லாம் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறது…
இனிமேலாவது காதலர்கள் வாழட்டும் – ஆம்
காதலர்களோடு காதலும் வாழட்டும் !
சு.இராஜசேகரன்
திரிசங்கு சொர்க்கம்
வற்றிவிட்ட காவிரியைப்போல
வற்றித்தான் விட்டது – கண்ணீரும்
என் கண்களில்…
எங்கோ என் மனதில்,
பதிந்துவிட்ட பிம்பம் – பரவிக்கிடகிறது
பரிதவிக்கும் உயிர் முழுதும்…
நீ -
இருக்கிறாய் என்றெண்ணி
இறுமாந்திருக்கவும் முடியவில்லை…
இல்லை என்றெண்ணி
இன்னுயிர் விடவும் மனமில்லை…
திரிசங்கு சொர்கமடி எனக்கு…
வந்துவிடு !
எனக்கு, வாழ விருப்பமில்லை…
வாழ்க்கை
எதுவென்று காட்டுவதற்க்காகவாவது …
வந்துவிடு …
எனக்கு, வாழ விருப்பமில்லை…
நீயில்லாமல் …!
-இராஜசேகரன்
என் தனயன்
- வாழ்வில் வாஞ்சையுற்று – உன்னை
வழி தொடர்ந்தவனை
விழி பிதுங்கிட விரட்டியதென்ன … ?
சொர்க்கத்திற்கு …!
- துரோகத்திற்கு இலக்கணமாய் – நீ
இருந்தல்ல வலி எனக்கு …
- தியாகம் என நினைத்து
உன்னை துறந்து …
விடுதலை வேண்டி
தன்னை துறந்த – என்
தனயனின் நினைப்பே – நெஞ்சைப் பிளக்கும்
உளி எனக்கு !
- அவன் செய்த
அத்தனையும் – வீணா?
விடை சொல் எனக்கு !
- பெண்ணே – நீ
விண்ணைத் தாண்டி வர வில்லை …
பரவாயில்லை – இனி
படி தாண்டாமலாவது இரு – அதுவெ
போதும் எனக்கு …
- உன்னை நம்பிய – இன்னொரு
உயிராவது மிச்சப்படுமே ….
- இராஜசேகரன்
Thursday, 26 July 2012
பசுமை
காதோடு காது வைத்து ,
கிசு கிசுத்த நாட்கள்…
கானா தூரத்தில் இருந்தாலும்,
கண்ணோடு கண் பேசிய நாட்கள்…
கிசு கிசுத்த நாட்கள்…
கானா தூரத்தில் இருந்தாலும்,
கண்ணோடு கண் பேசிய நாட்கள்…
----
தனிமையில் இருந்த போதும்,
என் உயிர் தீண்டும் உன் ஸ்பரிசம்…
என் உயிர் தீண்டும் உன் ஸ்பரிசம்…
----
வறுமையில் வாடிய போதும்,
பசுமையாய் இருந்தது வாழ்க்கை…
பசுமையாய் இருந்தது வாழ்க்கை…
----
பணத்தில் பசுமையாகிய பின் – ஏனொ
எனக்குத் தோன்றுகிறது – வெறுமையும்
உள்ளூர ஒரு வறுமையும்… !
எனக்குத் தோன்றுகிறது – வெறுமையும்
உள்ளூர ஒரு வறுமையும்… !
----
Monday, 23 July 2012
பெண்
பெண்
-------------
தோகை மயிலாள்
என் சோகம் பொடித்தாள் ;
வாகை சூடி மகிழ
ஒர் வாழ்க்கை கொடுத்தாள்;
துயில தூளியும் கொடுத்து,
விழிக்க ஒளியும் கொடுத்து ...
எதையும் பாராமல் -
எல்லாமுமாய் என்னோடு
கலந்து நிற்பவளைப் போல்...
கண்டதுண்டா நீங்களும் ...?
கவனிக்க மறந்திருக்ககூடும்
உங்கள் வாழ்க்கையிலும் -
தாயாய், தாரமாய் ,
தமக்கையாய் ,தோழியாய் - ஏதொ
ஒரு ரூபத்தில் பெண் -
உங்கள் அன்புக்காக ,அங்கீகாரத்திற்காக
காத்திருப்பதை ...
கண்டுணரும் போது
உயிரோட்டம் வரும்,
உங்கள் உங்களுக்குள்ளும் ...
அன்புடன்,
RJ ராஜா (எ) சுந்தர இராஜசேகரன்.
கதம்பம் இதழில் இடம்பெற்றது!
Subscribe to:
Posts (Atom)
நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்
என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...












