அவளோடு கழிந்த இரவுகள்...
உண்மையில் அப்படி ஏதும்
என் நினைவில் இல்லை....!
தனிமையில் ஆழ்த்திய - இந்த
வாழ்க்கைக்கு தெரிய வாய்பில்லை...
பிரதி ஒரு நொடியும் - அவள்
நினைவுகளில் நான்
பிணைந்தே வாழ்ந்திருக்கிறேன் என்று...
அவள் அருகே இருந்தாலும்
இல்லாவிட்டா லும்...
அவள் இருப்பை - நான்
ஏதோ ஒன்றில் உணர்ந்து கொண்டே
இருக்கிறேன் !
அவளின்
ஒவ்வொரு நொடிகளையும் - நான்
பிரதி எடுத்து வைத்திருக்கிறேன் - அதனால் ...
தனியே நினைத்திருக்க ...
அவளோடு கழிந்த இரவுகள் என்று - ஏதும்
என் நினைவில் இல்லை !
அன்புடன்
*சுந்தர இராஜசேகரன்.*
