Sunday, 26 December 2021

வாழ்க்கைக்கு வழிகாட்டும் வள்ளுவம்

பசியில் எனக்கு யாரோ ஊட்டிய உணவு//
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் !//

ஆபத்தில் கைகொடுத்த நண்பன்//
உடுக்கை இழந்தவன் கைபோல !//

எம்மக்கள் மழலைச் சொல் எனக்கு//
குழலினும் யாழினும் இனிது!//

எம்மக்களை சான்றோர் புகழ்ந்திட //
ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் என்னவள்!//

கிராமத்தின் எல்லை தாண்டி நான்// 
கெடில் விழுசெல்வம் கல்வி !//

பசுமை கழனிகளில் கால் வைத்தபோது// 
உழுதுண்டு வாழ்வாரே !//

என் காதல் வாழ்க்கை//
வாலெயிறு ஊறிய நீர்//

என் நட்பு வட்டம்//
காமுறுவர் கற்றறிந்தார்//

நான் விலகி நின்ற நேரம்//
சிற்றினம் அஞ்சும் பெருமை//

எப்போதும் சிரித்த முகமாம் எனக்கு//
இடுக்கண் வருங்கால் நகுதற் பொருட்டு//

என் அனுபவ தெளிவு//
மக்களே பொல்வர் கயவர்//

வள்ளுவம் எடுத்தியம்பிய இன்குறள்//
அல்லாது வேறெது வாழ்விற்கு - வழி ?!//


ஆக்கியோன்

சுந்தர இராஜசேகரன்
நீலப்பாடி கிராமம்
நாகை மாவட்டம்



இந்த கவிதை கதம்பம் இதழில் இடம் பெற்றது.

Sunday, 5 December 2021

இசை!

ஆழ்ந்த அமைதியில் 
இதயத்தின் துடிப்பு !

தனித்து இருக்கையில் 
இலைகளின் அசைவு!

ஆழ்ந்த நித்திரைக்கான முயற்சியில் 
கடிகார முள்ளின் நகர்வுகள்!

தவித்திருக்கையில் 
அணைப்பின் கதகதப்பில் மூச்சு !

மரணத்தின் வாயிலை 
தொட்டுத்திரும்பி 
கண் விழிக்கையில் 
பிறந்த குழந்தையின் அழுகுரல் !

குளிர் உடலை குத்திக்கிழிக்கையில் சருகுகளை கூட்டி எரியும் 
நெருப்பின் ஒலி !

ஆக மொத்தம் 
உடலுக்கும் உயிருக்கும் 
ஆறுதலும் தேறுதலுமாக என்றுமே ...

இயற்கை எப்போதும் 
நம்மோடு பேசும் மொழி !

இறையோடு இசைந்து இருக்க 
எங்கும் இழையோட வேண்டியது - இசை!

.
இறைவன் திருவருளால்!.

RJ ராஜா (எ) சுந்தர ராஜசேகரன்


ரிச்மண்ட தமிழ் சங்கத்தின் டிசம்பர் மாத கதம்பம் இதழில் இந்த கவிதையை இடம்பெற செய்த நல் உள்ளங்களுக்கு நன்றி.

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...