காலமெல்லாம் சுமந்த சின்னங்கள்
துணையாக வரும் அவளின் எண்ணங்கள்
இன்னும் கூட உழைக்க
என் வாழ்வின் வண்ணங்கள்
அன்னாடம் காச்சி கர சேத்தோமே
அப்படியே தான் இன்னிக்கும்...
ஆமா நீ சொல்லு-நாம
கர சேந்துட்டோமா இப்ப...?
அது என்னவோ போகட்டும்
நீ இருக்கயில எனக்கு
வேற என்ன வேணும் சொல்லு?
வெயிலு சுட்டாலும் பரவால்ல
உன் கூட நடக்குறதே சொகம்!
உரிமையில திட்டு வாங்கி
தித்திப்பா வாழ்ந்திருப்பேன்!