Tuesday, 14 August 2012

திரிசங்கு சொர்க்கம்


வற்றிவிட்ட காவிரியைப்போல
வற்றித்தான் விட்டது – கண்ணீரும்
என் கண்களில்…
எங்கோ என் மனதில்,
பதிந்துவிட்ட பிம்பம் – பரவிக்கிடகிறது
பரிதவிக்கும் உயிர் முழுதும்…

நீ -
இருக்கிறாய் என்றெண்ணி
இறுமாந்திருக்கவும் முடியவில்லை…
இல்லை என்றெண்ணி
இன்னுயிர் விடவும் மனமில்லை…
திரிசங்கு சொர்கமடி எனக்கு…

வந்துவிடு !
எனக்கு, வாழ விருப்பமில்லை…

வாழ்க்கை
எதுவென்று காட்டுவதற்க்காகவாவது …

வந்துவிடு …
எனக்கு, வாழ விருப்பமில்லை…
நீயில்லாமல் …!
                        
 -இராஜசேகரன்

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...