வற்றிவிட்ட காவிரியைப்போல
வற்றித்தான் விட்டது – கண்ணீரும்
என் கண்களில்…
எங்கோ என் மனதில்,
பதிந்துவிட்ட பிம்பம் – பரவிக்கிடகிறது
பரிதவிக்கும் உயிர் முழுதும்…
நீ -
இருக்கிறாய் என்றெண்ணி
இறுமாந்திருக்கவும் முடியவில்லை…
இல்லை என்றெண்ணி
இன்னுயிர் விடவும் மனமில்லை…
திரிசங்கு சொர்கமடி எனக்கு…
வந்துவிடு !
எனக்கு, வாழ விருப்பமில்லை…
வாழ்க்கை
எதுவென்று காட்டுவதற்க்காகவாவது …
வந்துவிடு …
எனக்கு, வாழ விருப்பமில்லை…
நீயில்லாமல் …!
-இராஜசேகரன்

No comments:
Post a Comment