அவள் கண்களால்
மொத்தமும் கிழி பட்டும்
நித்தமும் துடிக்கிறதேனோ?
நெஞ்சே
உன் மோட்சம்
அவள் முத்தத்திலா?
மொத்தத்திலா?
எத்தனை சக்தி அவள்
மாய வேலுக்கு!?
அவளுக்கென்ன
எல்லாம் முடியும்
மயில் போல தோன்றி - எனக்கு
வெயில் போல காந்தி
கண் வேலால் குத்தி
குறிப்பொண்டும் இல்லாமல்
நான் மட்டும் கத்தி
புன் நகை ஏதும் காட்டாமல்
நகைப்புக்கு என்னை ஆக்கி
நிஜ முக்தி ஒன்று தான்
இன்னும் எனக்கு பாக்கி!
No comments:
Post a Comment