Tuesday, 6 December 2022

பாரதி


பாரதி


மழித்து திரியும் கூட்டத்தில்

முறுக்கு மீசை வைத்து,//

முப்புரிநூல் அணிவோரில் 

கோட்டும் சூட்டும் போட்டு!//

கஞ்சிக்கு இருந்த தானியத்தை 

காக்கை குருவிக்கு ஈந்து!//

பன்மொழிகள் கற்றறிந்து 

தமிழின் மேன்மை சொன்னவர்!//

தேக வறுமை மெலிவை

 துணியில் மறைத்து .//

தேச நலிவை கவியில் ஏற்றினார்!//

சாக்கடை புழுக்களாய் வாழ்ந்திருந்த//

சமுதாயம் செழிக்க உசுப்பினார்!//

அரிய தமிழ் ஆளுமை கொண்டு// 

எளிய தமிழில் கவிதை தந்து

எல்லோரையும் எழுப்பினார்!//

காலம் மாறி போய்விட்டாலும்

அந்த அடிமை நீங்கிட்டாலும்//

வேறு பல முகமூடி கொண்டு

அடிமை இன்னும் இருக்குதடா!//

தீர்க்கதரிசன பாரதியே !//

இதைத் தெரிந்து தானோ 

கவிதை தந்தாய்.?//

இன்றும் கூட 

உன்னைத்தானே படித்துதானே சொரணை கொண்டோம்!//

கொஞ்சம் பகுத்தறிவாய் 

விழித்துக் கொண்டோம்!//

தமிழ் தாயின் தவப் புதல்வா

நமக்கெல்லாம் வரப் புதல்வா!//


கவிதை ஆக்கம்

சுந்தர இராச சேகரன்

மிச்சிகன். மாடிசன் ஹைட்ஸ் 


Kadhambam-April2023 by Michigan Tamil Sangam - Issuu



நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...