பாரதி
மழித்து திரியும் கூட்டத்தில்
முறுக்கு மீசை வைத்து,//
முப்புரிநூல் அணிவோரில்
கோட்டும் சூட்டும் போட்டு!//
கஞ்சிக்கு இருந்த தானியத்தை
காக்கை குருவிக்கு ஈந்து!//
பன்மொழிகள் கற்றறிந்து
தமிழின் மேன்மை சொன்னவர்!//
தேக வறுமை மெலிவை
துணியில் மறைத்து .//
தேச நலிவை கவியில் ஏற்றினார்!//
சாக்கடை புழுக்களாய் வாழ்ந்திருந்த//
சமுதாயம் செழிக்க உசுப்பினார்!//
அரிய தமிழ் ஆளுமை கொண்டு//
எளிய தமிழில் கவிதை தந்து
எல்லோரையும் எழுப்பினார்!//
காலம் மாறி போய்விட்டாலும்
அந்த அடிமை நீங்கிட்டாலும்//
வேறு பல முகமூடி கொண்டு
அடிமை இன்னும் இருக்குதடா!//
தீர்க்கதரிசன பாரதியே !//
இதைத் தெரிந்து தானோ
கவிதை தந்தாய்.?//
இன்றும் கூட
உன்னைத்தானே படித்துதானே சொரணை கொண்டோம்!//
கொஞ்சம் பகுத்தறிவாய்
விழித்துக் கொண்டோம்!//
தமிழ் தாயின் தவப் புதல்வா
நமக்கெல்லாம் வரப் புதல்வா!//
கவிதை ஆக்கம்
சுந்தர இராச சேகரன்
மிச்சிகன். மாடிசன் ஹைட்ஸ்
Kadhambam-April2023 by Michigan Tamil Sangam - Issuu