Wednesday, 16 December 2020

பவுர்ணமி

 பவுர்ணமி 

தெரிவதோ பாதி நிலா....

துப்பட்டாவில் இருந்து எட்டிப் பார்க்கும் 

என்னவளி ன் முகம்....






Monday, 23 November 2020

சிரித்து வைப்போம்! ( தனிமை - 13 )

 அவளின் அருகாமை அற்ற மெத்தையும் எனக்கு முட்படுக்கை!

அவளின் நினைவால் ஆழ்ந்த தூக்கம் இல்லை.... இரவில்

அவளை காணாமல் பகலில் விழித்திருக்க மனமில்லை....

ஆனந்தமாக வாழ்ந்திருக்க வும் வழி இல்லை!

யாருமின்றி தனித்து இருந்தும்...

நான் தவித்து இருக்கிறேன் என்று யாருக்கும் தெரியவில்லை!

எனக்கு ஆறுதல் சொல்ல எவரையும் காணவில்லை!

என் மீது குற்றம் காண கோடி மக்கள்!

அதில் நான் ஆறுதலுக்காக தேடியவர்கள் முதல் வரிசையில்!

என்னை நினைத்து சிரிப்பதா...

என் நிலையை நினைத்து சிரிப்பதா...

எது எப்படியோ.... அழுவதை விட 

சிரித்து வைப்போம்!

Tuesday, 15 September 2020

வலி

கடந்து 

போவது தானே 

வாழ்க்கை என்று 

ஆறுதல் சொல்லிக் கொண்டேன் !

ஆனால்...

அது

 கடந்து சென்ற போது

வலித்ததை விட

விட்டுப் போன சுவடுகள்

அதிகமான வலியை 

தினம் தினம் தருகின்றன !

ஒற்றை நிலா

 ஒற்றை விழி பார்வையில்

என் நித்திரை கிழிக்கிறாள்....

குறும்புக் குறு நகையில் - என்னை

குத்திக் குடிக்கிறாள்!


குட்டி கன்னங்களில் 

குழி விழும் சிரிப்பினில்...

சிதைந்த என்னை தேடி தேடி தேடி நான்....


காற்றில் பரவும் கற்றை முடியில்

என் என் உதிரம் சுடும் ஒற்றை நிலா

பாதி முகம் காட்டி - என்

ஆதி வரை ஆளுகின்றாய்....

மீதி முகமும் காட்டி - என்னை

மீட்டுக் கொடு...!


உன்னை கைப்பிடிக்கும்

காதலனாய் இல்லாமல் போனாலும்...

காவலனாய் கூட வர 

கூடிடுமோ ஓர் வரம்....


உன் புன்னகை கண்டுவிட

கன்னத்தை தொட்டு விட

கார்குழலில் விளையாட

காற்றாய் தான் நானிருப்பேன்...

காலமெல்லாம் காத்திருப்பேன்...!



உன்னோடு நானிருந்து 

உயிரில் களித்திருப்பேன்!

உன் மூச்சாய் உயிர் தொட்டு...

என் உயிரை காத்திருப்பேன்!


என்றாவது ஒருநாள் 

என் நினைப்பு வந்தால்....

ஆழப்பெரு மூச்சை அரை நொடி நிறுத்தி

கண் மூடு கண நேரம்....


இதயத்தின் ஓசையாய் - என்

காதலும் ஒலித்திருக்கும்!


கவிதை ஆக்கம் : சுந்தர இராசசேகரன்

Thursday, 23 July 2020

தனிமை -12 (திகட்டா தித்திப்பு...)



சமையலுக்கு எழுதிய ரோக்கா - அன்று
நீ எழுதி தரும் அந்த நாளை
எனக்கு சொல்லியது....

நீ படித்து படித்து
சொல்லி அனுப்பியும்
மறந்துவிட்டு வந்து - அசடு வழியும் அந்த நாட்களின் நினைப்பு என்னை கிள்ளியது…

உன்னை ஒருநாளாவது நினைக்காமல் இருந்து விட வேண்டும் என்று ….

இயன்ற வரை முயன்று முயன்று தோற்கின்றேன்- ஆமாம்
உன் நினைப்பு என் இதயத்தை முட்டி தள்ளுகிறது….

அன்று நமக்கு கல்யாணம் ஆகி இருக்கவில்லை…

உன்னை நான் கண்களாலேயே நான் வாரி அள்ளியதும்…
அற்புத சிரிப்பாலே நீ என் இதயத்தை கிள்ளியதும்…
கனவில் உன்னை கண்டு நான் துள்ளியத்தும்….
இதையெல்லாம் நினைத்து என்னை நானே எள்ளியதும்…

என்னவென்று சொல்ல – சசி ❣️

காலம் மாறலாம்…
என் கடமைகளும் மாறலாம்…
காதல் மட்டும்…

நீ
எப்போதும் எனக்கு திகட்டா தித்திப்பு…

போடி….❣️

Saturday, 6 June 2020

தனிமை 11 - ( என் கன்னங்களில்... !? )

 


வாழ்வில்

எத்தனையோ சுவைகள் எனக்கு...

பயம்; ஏக்கம்; ஏளனம்; கோபம்; சோகம்; அமைதி! மகிழ்ச்சி; ஆனந்தம்! காதல் - சில நேரங்களில் 
சுகப்பட்ட தனிமை!

இன்று - 
சுமையாகி விட்ட அதே தனிமை
ஒருவேளை தின்றுவிட்டு இருக்குமோ என்னையும் என் உயிர்ப்பையும் !?

இப்பொழுதெல்லாம் -
 எனக்கு தெரிவதே இல்லை
 எந்த ஒரு வலியும்!

ஒருவேளை -
 மரத்துப் போய் இருக்கலாம்!


இப்படியெல்லாம் -
 ஏதேதோ எண்ணிக் கொண்டு
 நான் இருக்கையில்

நிதர்சனத்தில் நிழல் என
 ஓடிக்கொண்டிருந்த குறும்படத்தில்
 தோய்ந்து போய்....


அதில் தொக்கி நிற்கும்
 சின்னஞ்சிறு உணர்வுகளுக்கு எல்லாம்
 என் கட்டுப்பாடு இன்றியே
 கசிந்து கொண்டிருந்தது கண்ணீர்...


கண்ணம் தொட்டு கசியும்
 கண்ணீருக்கு நன்றி!
அன்றும் இன்றும் என்றும் என்னோடு!


நான் உதிர்ந்து விடாமலும் 
 உலர்ந்து விடாமலும் 
உயிர்ப்போடுதான் இருக்கிறேன் என்பதை...
உரக்க சொல்லி உலர்ந்து போனது
 கண்ணீர் என் கன்னங்களில்!


அன்புடன் உங்கள்.

சுந்தர ராஜசேகரன்.

Saturday, 30 May 2020

தனிமை - 10 ( அவளோடு கழிந்த இரவுகள் )




அவளோடு கழிந்த இரவுகள்...
உண்மையில் அப்படி ஏதும் 
என் நினைவில் இல்லை....!

தனிமையில் ஆழ்த்திய - இந்த
வாழ்க்கைக்கு தெரிய வாய்பில்லை...
பிரதி ஒரு நொடியும் - அவள்
நினைவுகளில் நான் 
பிணைந்தே வாழ்ந்திருக்கிறேன் என்று...

அவள் அருகே இருந்தாலும் 
இல்லாவிட்டா லும்...
அவள் இருப்பை - நான் 
ஏதோ ஒன்றில் உணர்ந்து கொண்டே 
இருக்கிறேன் !

அவளின் 
ஒவ்வொரு நொடிகளையும் - நான்
பிரதி எடுத்து வைத்திருக்கிறேன் - அதனால் ...

தனியே நினைத்திருக்க ...
அவளோடு கழிந்த இரவுகள் என்று - ஏதும்
என் நினைவில் இல்லை !


 அன்புடன்
*சுந்தர இராஜசேகரன்.*

Thursday, 16 April 2020

( தனிமை - 9 ) ஒன்னும் சொல்றதுக்கு இல்லை 🤪




The most awaited so far. Which is not happened again!
Still my blessings remains I'm Sensing it
Whatever I love to the core 😘❤️ 😢
Will never be in my hands
Let me pay and balance the graph of my karma

 This is little more painful than my capacity
Even I don't have a scholder to share
 I found no hands to wipe my wetness in my eyes👏👏👏👏👏

Sorry to make you feel bad just ignore.
Since i don't have any other choice
Only mobile and whatsup with me ☺️

Cheer up !Stay home stay safe
My blessings !Namasivaya

Monday, 13 April 2020

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மனையாளே !

கடந்த காலம் - நான்
கடந்து வந்த காலம்
என்று நினைத்து இருக்கையில்

போடா - உன்னை
கடந்து சென்ற காலம்
என்று யாரோ சொன்னது போல் பொறி தட்டியது

சரி போகட்டும்

பருவ காலத்தில்
பயிர் செய்ய ஏனோ ஆசை இல்லை

இன்று பகிர்ந்து கொள்ள இயலா எத்தனையோ நோக்கங்கள்

 குடும்பத்தை பெரிதாக்கி கொள்ள குறைந்த பட்ச்ச ஆசை கூட இருக்கவில்லை

பெற்றோரை தாங்கி நிற்பதனை தவிர பெரிதாக யேதும் நினைத்திருக்க வில்லை....

ஏதோ வெந்ததை தின்று வெந்து போகும்படி விதிக்கப்பட்டு விட்டது என்ற படி சென்று கொண்டிருந்த என்னில்...

எண்ணிகூட பார்க்கா வண்ணம் வந்ததோடு
வாழ்க்கையில் வண்ணமும் பூசி விட்டவளே ....

காமம் தாண்டியும் கனநேரம் கூட என்னை பிரிந்திராமல்...

இதயத்தில் இறங்கி விட்டவளே...

என் இருண்டு கிடந்த இதயத்தில் விளக்கேற்றிய வின்மீனே...

என் இதயம் கூட அழகானது என்று எனக்கே எடுத்து காட்டியவளே...


ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் எனக்கு புதிதாகவே தெரி கிறாய்...

அது எப்படி ?

ஆச்சரியமாக இருக்கிறது! சுமார் ஆறு வருடம்...

ஆற்று வெள்ளம் போல் சென்று விட்டது!

நேற்று பார்த்தது போல் இன்றும் புதியவளே நீ எனக்கு....

தேகம் சுருங்கிய பின்னரும் எனக்கு நீ தேனேன இருப்பாய்!

உன் இருப்பில் நான் இரும்பென இருக்கிறேன்...

என் இதய வலி உன் வலிகளை இங்கு எனக்கு உரைக்கும்!

கவனமாய் இரு! உன்னால் மட்டுமே நான் உடைந்து விடாது இருக்கிறேன்!

இது நாள் வரை உனக்கு பிடித்ததை செய்து விட முயற்சி மட்டுமே செய்திருக்கிறேன்!

முடிந்ததா! முடிவு உன் கையில்!

பல்லாயிரம் மைல் தொலைவில் இருந்து என் வண்ண மயிலுக்கு
ஒரு பிறந்த நாள் வாழ்த்து!

ஒவ்வொரு நாளும் உன் இதயம் மகிழ்ச்சியால் நிறைந்து இருக்கட்டும்.

இறைவன் உன்னை இதயத்தில் வைத்து காக்கட்டும்!

இறைவா நீ என்னை காப்பதும்! என்ன வளை காப்பதும் ஒன்றே!

காத்திரு என்னவளையும் !
அவளை காத்து இருப்பதால் என்னையும்!

நல்வாழ்த்துக்கள்! நங்கை நல் லாளே !

Monday, 17 February 2020

தனிமை பகுதி 8 ( நினைவில் நிஜமாயும், நிஜத்தில் நினைவாயும் நீ )





இது-
நித்திய த்திற்கும்
அநித்தியத்திற்குமான போராட்டம்...

நிரந்தரமானது எது ?
 தற்காலிகமானது எது புரியவில்லை....

மூங்கில் ஒத்த உன்
தோள் நிரந்தரமா...?

உயிர் தீண்டும்
உன் ஸ்பரிசம் நிரந்த ரமா...?

தேடும்போது மாய
பிம்பமாய் மட்டுமே
இருக்கிறாய்....


கண்
மூடும் போது
உண்மையாகவே என்னை
ஏமாற்றுகிறாய்....


கைநீட்டி
தேடும்போது
தலையணையே எனக்காக
இருக்கிறது....

கண்
சிந்தி வழியும்போது
என் படுக்கை விரிப்பே
துடைக்க கிடைக்கிறது....

நீ
துடைப்பாய் எனில்
கண நேரம் கூட மிச்சமில்லாமல்
கண்ணீர் சிந்தி டவே ஆசை!


நீ அழைப்பாய் எனில்
நெருப்பில் என்னை
இடக்கூட ஆசை....

தேடிப்பார்க்கிறேன்
காயமின்றி ஏதுமில்லை....

எனக்கு
வலிக்கிறதா என்று கூட
தெரியவில்லை...

ஆனால்
தேடல் மட்டும்
அப்படியே இருக்கிறது...


 இந்த வலி
பழகிப் போய்விட்டது...

இதயத்தில் அப்படியே
தங்கி விட்டது...


உயிரோடு இருப்பதை விட
 உயிர்ப்போடு இருப்பது
மிக அவசியம் என்று...
 பார்த்து பார்த்து வாழ துடித்தவன் நான்


இன்று -
 உயிர் மட்டும் இருக்கிறது


உயிர்ப்பு இனி
திரும்பிவிடும் என்று
தோன்றவில்லை....


எதற்கோ கட்டுப்பட்ட பொம்மை என ஆயினேன் நான்


 வெந்ததைத் தின்றுவிட்டு
 ஒருநாள் வெந்து விட காத்திருக்கிறேன்

வேறொன்றும் வழி இல்லை எனக்கு

 உனக்காக அதுவும் பழகிப் போயிற்று!

I love you. ❣️



நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...