Monday, 21 August 2017

தனிமை (பகுதி 3)

வாழ்க்கையின் ஓட்டத்தில்
என்னை எரிந்து போய் விடாமல்
காத்திரு....

என்னை காப்பதும்...
என் மேலான உன் காதலை காப்பதும்
வேறல்ல...

உன் இதழும் அழகும்
போலத்தான்....
நீயும், நானும்....


Sunday, 20 August 2017

தனிமை (பகுதி 2)


அந்தி மாலை,
அரும்பிடும் மழை,
அடிவானில் ஆதவன்,
அணைத்திடும் தென்றல்,
அவளின் நினைவு,
அழுதிடும் மஞ்சம் − அதை
அறிவிக்கத் துணியா நெஞ்சம் !

இனிமையிலும், இன்னலிலும்
இதழ் பதித்து பகிர்ந்திட
காத்திருக்கும் கணவன் − கனவுடன்.

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...