பெண்
-------------
தோகை மயிலாள்
என் சோகம் பொடித்தாள் ;
வாகை சூடி மகிழ
ஒர் வாழ்க்கை கொடுத்தாள்;
துயில தூளியும் கொடுத்து,
விழிக்க ஒளியும் கொடுத்து ...
எதையும் பாராமல் -
எல்லாமுமாய் என்னோடு
கலந்து நிற்பவளைப் போல்...
கண்டதுண்டா நீங்களும் ...?
கவனிக்க மறந்திருக்ககூடும்
உங்கள் வாழ்க்கையிலும் -
தாயாய், தாரமாய் ,
தமக்கையாய் ,தோழியாய் - ஏதொ
ஒரு ரூபத்தில் பெண் -
உங்கள் அன்புக்காக ,அங்கீகாரத்திற்காக
காத்திருப்பதை ...
கண்டுணரும் போது
உயிரோட்டம் வரும்,
உங்கள் உங்களுக்குள்ளும் ...
அன்புடன்,
RJ ராஜா (எ) சுந்தர இராஜசேகரன்.
கதம்பம் இதழில் இடம்பெற்றது!
No comments:
Post a Comment