Sunday, 5 December 2021

இசை!

ஆழ்ந்த அமைதியில் 
இதயத்தின் துடிப்பு !

தனித்து இருக்கையில் 
இலைகளின் அசைவு!

ஆழ்ந்த நித்திரைக்கான முயற்சியில் 
கடிகார முள்ளின் நகர்வுகள்!

தவித்திருக்கையில் 
அணைப்பின் கதகதப்பில் மூச்சு !

மரணத்தின் வாயிலை 
தொட்டுத்திரும்பி 
கண் விழிக்கையில் 
பிறந்த குழந்தையின் அழுகுரல் !

குளிர் உடலை குத்திக்கிழிக்கையில் சருகுகளை கூட்டி எரியும் 
நெருப்பின் ஒலி !

ஆக மொத்தம் 
உடலுக்கும் உயிருக்கும் 
ஆறுதலும் தேறுதலுமாக என்றுமே ...

இயற்கை எப்போதும் 
நம்மோடு பேசும் மொழி !

இறையோடு இசைந்து இருக்க 
எங்கும் இழையோட வேண்டியது - இசை!

.
இறைவன் திருவருளால்!.

RJ ராஜா (எ) சுந்தர ராஜசேகரன்


ரிச்மண்ட தமிழ் சங்கத்தின் டிசம்பர் மாத கதம்பம் இதழில் இந்த கவிதையை இடம்பெற செய்த நல் உள்ளங்களுக்கு நன்றி.

2 comments:

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...