Sunday, 26 December 2021

வாழ்க்கைக்கு வழிகாட்டும் வள்ளுவம்

பசியில் எனக்கு யாரோ ஊட்டிய உணவு//
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் !//

ஆபத்தில் கைகொடுத்த நண்பன்//
உடுக்கை இழந்தவன் கைபோல !//

எம்மக்கள் மழலைச் சொல் எனக்கு//
குழலினும் யாழினும் இனிது!//

எம்மக்களை சான்றோர் புகழ்ந்திட //
ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் என்னவள்!//

கிராமத்தின் எல்லை தாண்டி நான்// 
கெடில் விழுசெல்வம் கல்வி !//

பசுமை கழனிகளில் கால் வைத்தபோது// 
உழுதுண்டு வாழ்வாரே !//

என் காதல் வாழ்க்கை//
வாலெயிறு ஊறிய நீர்//

என் நட்பு வட்டம்//
காமுறுவர் கற்றறிந்தார்//

நான் விலகி நின்ற நேரம்//
சிற்றினம் அஞ்சும் பெருமை//

எப்போதும் சிரித்த முகமாம் எனக்கு//
இடுக்கண் வருங்கால் நகுதற் பொருட்டு//

என் அனுபவ தெளிவு//
மக்களே பொல்வர் கயவர்//

வள்ளுவம் எடுத்தியம்பிய இன்குறள்//
அல்லாது வேறெது வாழ்விற்கு - வழி ?!//


ஆக்கியோன்

சுந்தர இராஜசேகரன்
நீலப்பாடி கிராமம்
நாகை மாவட்டம்



இந்த கவிதை கதம்பம் இதழில் இடம் பெற்றது.

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...