பசியில் எனக்கு யாரோ ஊட்டிய உணவு//
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் !//
ஆபத்தில் கைகொடுத்த நண்பன்//
உடுக்கை இழந்தவன் கைபோல !//
எம்மக்கள் மழலைச் சொல் எனக்கு//
குழலினும் யாழினும் இனிது!//
எம்மக்களை சான்றோர் புகழ்ந்திட //
ஈன்றபொழுதில் பெரிதுவக்கும் என்னவள்!//
கிராமத்தின் எல்லை தாண்டி நான்//
கெடில் விழுசெல்வம் கல்வி !//
பசுமை கழனிகளில் கால் வைத்தபோது//
உழுதுண்டு வாழ்வாரே !//
என் காதல் வாழ்க்கை//
வாலெயிறு ஊறிய நீர்//
என் நட்பு வட்டம்//
காமுறுவர் கற்றறிந்தார்//
நான் விலகி நின்ற நேரம்//
சிற்றினம் அஞ்சும் பெருமை//
எப்போதும் சிரித்த முகமாம் எனக்கு//
இடுக்கண் வருங்கால் நகுதற் பொருட்டு//
என் அனுபவ தெளிவு//
மக்களே பொல்வர் கயவர்//
வள்ளுவம் எடுத்தியம்பிய இன்குறள்//
அல்லாது வேறெது வாழ்விற்கு - வழி ?!//
ஆக்கியோன்
சுந்தர இராஜசேகரன்
நீலப்பாடி கிராமம்
நாகை மாவட்டம்
இந்த கவிதை கதம்பம் இதழில் இடம் பெற்றது.
No comments:
Post a Comment