Thursday, 9 September 2021

எங்க டீச்சர்

எங்க இந்திராணி டீச்சர்!

இறைவன் ஒருவேளை வாய்ப்பு தந்தால் 
உங்கள் கண்பார்த்து வாழ்ந்த நாட்களை கேட்பேன்!


நீண்ட நெடிய 
காலம் முன்னால் , 
நீங்கள் ஊற்றிய 
அன்பின் நீரிலே 
இன்னும் வாழ்ந்திருக்கிறேன்!


பருவம் வந்த காலத்தில் 
உடலுக்கான இரசாயன மாற்றத்தில் 
பெண்களை பார்த்து பார்வை ஓடிய வேளையிலும்,
அத்தனை பெண்களிலும் நான் 
உங்களின் ஏதோ ஒரு சாயலாவது கிடைக்காதா 
என்றே தேடி இருந்தேன்!


இன்றும் கூட 
மனதிற்கு பிடித்த பெண்களெல்லாம், 
தாயோ, தமக்கையோ, தோழியோ, மனைவியோ... 
நான் உங்களையே அவர்களிலும் தேடி இருக்கிறேன்!


அறிவீர்களா ? இவற்றை எல்லாம்! 
காலம் கடக்கும் முன்னே வாவது 
மீண்டும் காட்டினானே உங்களை!


நீண்ட இடைவேளையில்  - என் காதலை 
மீண்டும் கண்டெடுத்தால் இப்படி களிப்பேனா!?
மனைவின் ஸ்பரிசத்தில் இப்படி சிலிற்பேனா !
அறியேன்!

உங்கள் 
குரலை கேட்ட பின் - என் களிப்பு
இவற்றையெல்லாம் விட 
எங்கோ உயர்ந்து இருக்கிறது!


கொஞ்சம் பொறாமை தான்! 
 என்னால் உங்கள் பிள்ளையாய் 
இருக்க முடியவில்லையே!


பெண்களில் 
இனிமையானவர் களும் இருக்கிறார்கள் என்று
முதல் நம்பிக்கையை விதைத்வர் நீங்கள்!

எப்படியோ டீச்சர் 
என்று கூப்பிட்டு பழகினோம்!
உண்மையில் அம்மா என்ற சொல்லை விட 
ஆழமான பாசத்தோடு தான் அழைத்து விட்டோம்!


அதே விதமாக 
யாரையும் அப்படி 
அழைத்து விட்டதாக நினைவில்லை!

என்றாவது ஒருநாள் - உங்களை 
நேரில் பார்த்து இருப்பேன்!
உணர்ச்சி பெருக்கால் 
நீர் பெருக்கி வழிந்திருப்பேன்!

உங்கள் கால்களை 
ஸ்பரிசிக்க வேண்டி இருப்பேன்!
ஒருவேளை சோறு 
உங்கள் கைகளில் இருந்து 
பிச்சையாக கிடைத்தாலும் 
அமுதம் என்று இருப்பேன்!


எங்களை போல் 
கொடுத்து வைத்தவர்கள் - எத்தனையோ!

எனக்கு உங்கள் அளவுக்கு 
இதுவரை நான் மதித்து விட்ட, 
நேசித்து விட்ட பெண்களில்லை...
இனி வருவதற்கும் வாய்ப்பில்லை!

கொஞ்சம் ஏக்கங்களுண்டு, 
உங்கள் கை உருண்டை சோற்றுகாக , 
தலைகோதும் விரலுகாக, 
உயிரும் உணரும் அன்பு சிந்தும் கண்களுக்காக, 
ஆற்றுப்படுத்தும் சிரிபிற்காக.

எப்படி எழுதினாலும் 
என் உள்ளத்து உணர்வுகளை சொல்ல 
மொழியில் சொற்களில்லை!

என் உயிரின் உணர்வுகள் 
என்னை பெறாத அம்மாவின் (உங்களின்) 
உயிருக்கு தெரியும்!

இறைவன் -
தன் ஒட்டுமொத்த திறமையையும் கொட்டி 
அனுப்பி வைத்தான்! உங்களை...
நானும் கூட கொடுத்து வைத்தவன்! 
இதுவரை பெற்றதற்கும், 
இனி பெற இருப்பதற்கும் நன்றியோடு


நான்

RJ ராஜா (எ) சுந்தர ராஜசேகரன்

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...