அங்கமெல்லாம் புழுதிபட
அகம் எல்லாம் குளிர்ந்து விட
உப்பு படர்ந்து உழைத்தே விட
உவகைதான் எனக்கு...
ஆண் மகனாய் இங்கே அன்பை விதைக்கவும் ஆசைதான்
சோறு ஆக்கி தருவதற்கு அவள் இருக்க
அரிசி வாங்கி வர நான் இருக்கிறேன்
ஆக்கி தருவது அன்பு என்றால்
அரிசி வாங்கித் தருவதும் அன்பு தானே
அதை ஒத்துக்கொள்ள இங்கே எப்போதும் வம்பு தானே
பாவம் ஆண்மகன்...
அன்பிற்கு இனியவளை
அவர் சுமந்த பிள்ளையினை
அன்போடு இருத்தி வைக்க
அகத்தை கட்டிவைத்தேன்
அகத்தில் அழகுபட வாழ்வது அன்பென்றால்
அதை கட்டி முடிக்க
கடன்பட்டு முட்டித்த விப்பதும் அன்பு தானே
ஆககூடி ஒரு சந்தேகம்
அன்பை விதைத்தால் அன்பை அறுவடை செய்ய முடியுமா!?
அவையோர் தான் சொல்ல வேண்டும்!
அடிபட்ட ஆண்மகனின் அழுகை!
அன்பு என்பது தாய்ப்பாலை போல
கொடுத்துப் பெறுவதல்ல
பெறுதற்காய் கொடுப்பதும் அல்ல
வருதற்காய் காத்திருப்பதல்ல
கொடுப்பதன் மூலம் பெருகுவதே அன்பு
பெறுதல் மூலம் பொங்கிவழியும்
உலகின் மீது அன்பை கொடுப்பது உனக்கு நீயே கொடுத்துக் கொள்வது
உலகத்தில் இருந்து அன்பை பெறுவது உன்னை நீயே பெற்றுக்கொள்வது
கற்றுக்கொண்டார் கனவு கூட கனி போல் இனிக்கும்
உணர்ந்துகொண்டார் கண்கள் பனிக்கும்
உணர்ந்து உருகும் உள்ளத்தால் உன் வாழ்க்கையோ செழிக்கும்!
அன்பை விதைத்தால் அன்பை அறுவடை செய்ய முடியுமா!?
முடியும்!
அன்பை பிறருக்கு விதைத்து - அங்கு விளைந்த தா என்று பார்ப்பதை நிறுத்தி
கொடுத்த அன்பு உன்னுள் பெருகி நிற்பதை காணும்போது!
பெற்ற அன்பை ஆகக்கூடி பெருக்கி வாரி வழங்கும் போது உமகுள்ளே
பொங்கி வழிவதை உணரும்போது!
அந்த ஒரு நாளில்
விதைத்த அன்பு விளைந்து நிற்கும்!
வாருங்கள் உலகை அன்பால் நிரப்புவோம்!
மிகவும்.. அருமை அருமை.. 👌👌👌👌👌👏👏👏
ReplyDeleteநன்றி!
Delete