முந்தானை பார்க்கிறாள்
இந்த ஆணை சாய்க்கிறாள்
முறுவல் பூக்கிறாள்
மனம் பூரணமாக நிறைகிறாள்
நெற்றியில் சரிந்து விழும்
கற்றை குழலில்
என் ஒற்றை இதயம்
கொள்ளை அடிக்கிறாள்
தன் சிற்பம்
என் நெஞ்சில் தானே வடிக்கிறாள்...
ஏக்கம் பெருக்கி
என்னை வதைக்கும் சிறுக்கி...
- ஆக்கம்
- சுந்தர இராஜசேகரன்

No comments:
Post a Comment