Thursday, 14 January 2021

ஜல்லிக்கட்டு


ஜல்லிக்கட்டு - இப்படித்தான் 
சொல்லிக்கிட்டு இருக்கிறது 
என் தமிழ்ச் சமுதாயம்

வடமொழி எழுத்தில்- எங்கள் 
தமிழ் அடையாளம்
நான் மீட்டு அழைப்பேன்
அது மீள துடிப்பேன்
சொல்லுவோமா சல்லி கட்டு என்று!

வீறுகொண்டு நாங்கள் 
ஏறு தழுவினோம்
மஞ்சு விரட்டி - மாமன் 
மகளின் மனதில் ஏறினோம்!

வீரம் காட்ட - காளையின் 
திமிலை பிடித்தோம்
களைப்புத் தீர - எங்கள் 
தமிழை குடித்தோம்!

வீரம் விளைந்தது - 
எங்கள் மண்ணைக்  
காளைகளின் கொம்பு 
குத்திப் பிளந்தது!

கொம்பில் கட்டியிருந்த சல்லி 
வம்பில் தழுவிய வீரனின் கையில் ....
அவன் வெற்றியைச் சொல்லி !

மரபு ஆகிய வீரம் - எங்கள் 
மரபு அணுவிலும் இருக்கும் !
காலம் கடந்து போனாலும்...
தேசம் கடந்து நின்றாலும்
வேளை வரும்போது - வந்து
வேலோடு நிற்கும்...

இன்று சில குஞ்சு குளுவாங்கள்
காளையைக் கண்டதில்லை
கழனி யிலும் கூட 
கால் வைத்ததில்லை !

ஆனாலும் தேவை வந்த போது
இளைஞனோடு மழலை மாறா 
குழந்தையும்  குதித்து வந்தது !

மரபை காக்க, 
மறைத்து நின்ற திரை விலக்க,
பறை கொண்டு படை திரட்டி,
மறவன் ஆகி நின்றது !
நித்திய பசியும் மறந்து 
பத்திய உணவு உண்டு !
தகிக்கும் மணலில் - நெஞ்சம் 
கொதித்து நின்றது!
ஆகச்சிறந்த அழுத்தத்தை 
அகிலத்திற்கு தந்தது!

பண பலம் கொண்டு 
அரசியல் சூழ்ச்சி 
தந்தவருக்கு எல்லாம்
பாடம் சொல்லித் தந்தது....

இன்று-
கழனி அறியாக் 
குழந்தை இல்லை
மஞ்சுவிரட்டை அறியா 
மைந்தனும் இல்லை!

குமரிக் கண்டத்திலே 
அழிந்து போயிருந்தாலும்
மரபு எங்கள் மரபணுவை விட்டு 
அசைந்து கொடுக்கவில்லை !

அகில உலகமே அமைதியாக காத்திரு
தமிழ் கொண்டு ! வீரம் கொண்டு !
ஆகச் சிறந்த தத்துவம் கொண்டு !
எங்கள் இயல்பை மீட்டெடுத்து
மீண்டு வருகிறோம்

இயற்கையோடு இயைந்த தமிழ்ச்சமூகம்
வந்தாருக்கெல்லாம் வரம் தரும் சமூகம்
உலகெங்கும் பரவி நிற்கும் உன்னத சமூகம் 

ஓராயிரம் பேர் உலகை அழிக்க நினைத்தாலும்
சுயநலம் கொண்டு சுற்றித் திரிந்தாலும்
காத்திட வந்து நிற்கும் எங்கள் சமூகம் !

கல் தோன்றி 
மண் தோன்றா காலத்தே 
முன் தோன்றிய மூத்த சமூகம் !
நம் தமிழ்ச்சமூகம் !

நன்றி வணக்கம்.
வந்தே மாதரம்!

- இவன்

சுந்தர இராசசேகரன்.


#தமிழ்அமெரிக்காபொங்கல் 
#TamilAmericaNetwork 
#TamilAmericaTV 
#தமிழ்அமெரிக்காடிவி 
#TamilAmericaChannel 
#PongalCompetitions 
#TamilAmerica 
#தமிழ்அமெரிக்கா 
#PongalinUSA 
#americanpongal 
#கவிதை 

இந்த 2021 பொங்கள் கவியரங்கத்தில் எனக்கு வாய்ப்பளித்து 

முதல் பரிசையும் 

அள்ளித்தந்த தமிழ் அமெரிக்கா-Tamil America தமிழ் அமெரிக்கா - Tamil America 

பங்கு பெற்ற கவிஞர்கள் அத்துணை பேருக்கும்

என்னை மேடை ஏற்றி முதலில் அழகு பார்த்த ஆசிரியை அம்மா கமலாம்பாள் திருவாரூர் அவர்களுக்கும்

நன்றி!

காணொளி உங்கள் பார்வைக்கு!




1 comment:

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...