Thursday, 10 October 2019

ஆசை

காதோரம் ஆடும் அந்த அழகு முடி
கண்டு விடவும்

அவள் பேசும் போது ஆடும் காது ஜிமிக்கி கண்டு விடவும்...

முறுவல் பூக்கும் நேரம் அவள் கண்ணம் மீது கன்னம் வைத்து விடவும்...

கால நேரம் போவது தெரியாமல் கதைத்திருக்கவும்...


அவள் தூங்க என் தோள் கொடுத்திருக்கவும்...

அவள் செல்ல கோவம் கொண்டு என்னை அடித்திருக்கவும்....

அதற்காக பொய்யாக அழுதிருக்க அவள் மடியில் முகம் புதைக்கவும்...

கொஞ்சம் தூரமாக இருந்து அவள் தூங்கும் அழகை அமைதியாக ரசித்து இருக்கவும்...


காலை அவள் உறக்கம் கலைந்து எழும் போது ...

உறங்கி விட்டது போல நான் நடித்து இருக்கவும் ...

இன்று எனக்கான நினைவுகளே அவளுக்கு இல்லை என்பதை மறந்திருக்கவும்...

ஆசை எனக்கு...

நிராசையோ தேவா!

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...