Saturday, 24 June 2017

உன்னோடு உறங்குவதற்காகவே ...



உன்னோடு உறங்குவதற்காகவே
விழித்திருக்கிறேன்…
ஒவ்வொரு மணித்துளியும்…
நீ உறங்கிய பிறகும் விழித்திருக்கிறேன்…
நீ  விழிமூடியிருக்கும் அழகினை ரசித்த படி…
நீ விழித்த பிறகு நடித்திருக்கிறேன்
இப்போதுதான் விழித்தேன் என்ற படி…
எத்தனையோ வருடங்களாய் பார்த்திருந்தும்
புதிதாய் தெரிவதேன்ன நீ எனக்கு ?
என்ன தான் சேய்தாயோ என்னை…
உன்னை காதலோடு நோக்குவதை தவிர
வேறோன்றும் அறியவில்லையே நான்….
உன்னோடு உறங்குவதற்காகவே
விழித்திருக்கிறேன்…
ஒவ்வொரு மணித்துளியும்…

No comments:

Post a Comment

நண்பன் கண்ணதாசனின் கவிதைகள்

 என் பள்ளிதோழன் கண்ணதாசனின் கவிதைகளை பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். இன்று மீண்டும் அந்த குறிப்பேடுகளை கண்டெடுத்தேன். அவற்றை அப்படியே அவனின்...